Monday, March 21, 2011

கடல் அலையே!!!!

நான் பிரிய மனமின்றி விட்டுச் செல்லும்
என்னவனின் கால் தடயங்களை
தினமும் வந்து திருடிச் செல்லும் அலையே...
இன்றும் விட்டுச் செல்கின்றேன்
என்றாவது ஒரு நாள் திருப்பித்தருவாய்
...எனும் நம்பிக்கையில்..........(தனா).

தென்றல் விடு தூது

தேசம் கடந்து சென்று அவன்
கேசம் கலைத்துவரும் தென்றலே
என் பாசம் வெறும் வேஷம் இல்லையென்று
அவனிடம் நேசத்துடன் சொல்லிவிடு

...நீ அவனை தழுவிவருவதால் தான்
நான் உன்னை சுவாசிக்க மட்டுமல்ல
யாசிக்கவும் செய்கிறேன்......

நீ என்னைத் தீண்டும் போதெல்லாம்
என்னுள் நீள்கிறது அவன் நினைவு
ஏன் இந்த வன்மம் உனக்கு
என் அன்பு போல் ஒருதலை பட்சமாக.....(தனா)
இனிமையான கவிதை எழுது என்றாய்
உடனே உன் பெயரை பலமுறை
எழுதத் தொடங்கினேன்
என் கடதாசியும் முடிந்துவிட்டது
பேனா மையும் தீர்ந்துவிட்டது
...கையும் ஓய்ந்துவிட்டது- இருந்தும்
என் எண்ணம் மட்டும் மறையாமல்
கவி வரைந்து கொண்டேயிருக்கின்றது
என்றும் அழிக்கமுடியாதபடி
என் ஆழ்மனதில்...................(தனா).

Wednesday, December 15, 2010

News

அமெரிககா காட்டுக்குள் வினோத உருவம்! (படங்கள் இணைப்பு)
அமெரிககாவில் மான் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற ஒருவர் தான் அடர்ந்த காட்டுக்குள் இந்த உருவத்தைக் கண்டு படம் பிடித்ததாகக் கூறி வேட்டை நிகழ்வுகள் சம்பந்தமான ஒரு இணையத்தளத்துக்கு இந்தப் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.


இந்த நபர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை. இந்தப் படத்தை எடுத்தபோது தான் பெரும் அச்சமடைந்ததாகவும், தடுமாற்றத்தில் தனது கமரா கூட உடைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.கமரா உடைந்தபோதும் அதிலிருந்த மெமரி கார்ட்டுக்கு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பர்மேன் போல் காட்சியளித்த இந்த உருவம் காட்டுக்குள் மறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்இந்தக் காட்சியை இந்த இணையத்தளத்தில் பார்த்த பலரும் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஒரு இணையத்தள விளையாட்டில் இந்த உருவம் காணப்படுவதாக ஒருவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

உன் புன்னகை

புன்னகையை தொலைப்பது வதம்...
உன் புன்னகையில் தொலைவது வரம்...



News

வார்டு அறையில் சுற்றுகிறது வேலூர் ஆஸ்பத்திரியில் நுழையும் மர்ம உருவம்; செல்போன் படத்தால் பேய் பீதி ( வீடியோ இணைப்பு)
வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம் நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார்.



சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது.

இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்டரில் கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட சந்தேகம் ஏற்படுகிறது. பேய் வருவதை படம் எடுத்து அதனை தெளிவு படுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் அவர்களின் குரல் கேட்கிறது. பேய் வருவது உண்மை தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஏதாவது ஆஸ்பத்திரி குறித்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் பரவி வரும் ஆஸ்பத்திரி பேய் இருக்கா இல்லையா? அல்லது பேய் வருவதற்கான அறிகுறியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

திருவண்ணா மலையில் சித்தர் பரந்ததாக கடந்த ஆண்டு வீடியோ காட்சி பரவியது. அதுபோல வேலூரில் பேய் படக்காட்சி பார்ப்பவர்களை கலங்கடித்து வருகிறது.
15 Dec 2010

காதல்


மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா............