Monday, March 21, 2011

கடல் அலையே!!!!

நான் பிரிய மனமின்றி விட்டுச் செல்லும்
என்னவனின் கால் தடயங்களை
தினமும் வந்து திருடிச் செல்லும் அலையே...
இன்றும் விட்டுச் செல்கின்றேன்
என்றாவது ஒரு நாள் திருப்பித்தருவாய்
...எனும் நம்பிக்கையில்..........(தனா).

தென்றல் விடு தூது

தேசம் கடந்து சென்று அவன்
கேசம் கலைத்துவரும் தென்றலே
என் பாசம் வெறும் வேஷம் இல்லையென்று
அவனிடம் நேசத்துடன் சொல்லிவிடு

...நீ அவனை தழுவிவருவதால் தான்
நான் உன்னை சுவாசிக்க மட்டுமல்ல
யாசிக்கவும் செய்கிறேன்......

நீ என்னைத் தீண்டும் போதெல்லாம்
என்னுள் நீள்கிறது அவன் நினைவு
ஏன் இந்த வன்மம் உனக்கு
என் அன்பு போல் ஒருதலை பட்சமாக.....(தனா)
இனிமையான கவிதை எழுது என்றாய்
உடனே உன் பெயரை பலமுறை
எழுதத் தொடங்கினேன்
என் கடதாசியும் முடிந்துவிட்டது
பேனா மையும் தீர்ந்துவிட்டது
...கையும் ஓய்ந்துவிட்டது- இருந்தும்
என் எண்ணம் மட்டும் மறையாமல்
கவி வரைந்து கொண்டேயிருக்கின்றது
என்றும் அழிக்கமுடியாதபடி
என் ஆழ்மனதில்...................(தனா).