Monday, March 21, 2011
தென்றல் விடு தூது
தேசம் கடந்து சென்று அவன்
கேசம் கலைத்துவரும் தென்றலே
என் பாசம் வெறும் வேஷம் இல்லையென்று
அவனிடம் நேசத்துடன் சொல்லிவிடு
...நீ அவனை தழுவிவருவதால் தான்
நான் உன்னை சுவாசிக்க மட்டுமல்ல
யாசிக்கவும் செய்கிறேன்......
நீ என்னைத் தீண்டும் போதெல்லாம்
என்னுள் நீள்கிறது அவன் நினைவு
ஏன் இந்த வன்மம் உனக்கு
என் அன்பு போல் ஒருதலை பட்சமாக.....(தனா)
Subscribe to:
Posts (Atom)